
அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க விருப்பமா என வினவினார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே,
“எங்களுக்கு விருப்பம்தான். கண்டிப்பாக வாக்களிப்போம்.” எனவும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட,
“கோட்டாபய ராஜபக்ச விரைவில் இந்த நாட்டுக்கு வரவேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அப்படியானால் அவர் பிரதமர் ஆவதை யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.