
விசேட நடமாடும் சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சுகாதார வழிகாட்டல்களை மீறுகின்றவர்களை கண்டறிவர், என பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி இந்த சோதனை நடவடிக்கை இன்று மற்றும் எதிர்வரும் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் புத்தாண்டு நிகழ்வுகள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களிலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.