நட்டில் விரைவில் ஏற்படவுள்ள ஆபத்து!

விரைவில் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே விஜேதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.

அதன்படி எதிர்வரும் 03 வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

அத்தோடு அடுத்த சில வாரங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படலாம் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

இதேவேளை அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான மாற்றுவழிகள் முன்னெடுக்கப்படும் என கூறிய அமைச்சர், ஒருபோதும் மக்களை பட்டினியில் சாகவிடப்போவதில்லை என்றும் உறுதியளித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal