
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரருமே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் , ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க தனது, டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.