யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் 19 வயதான சிறுமி ஒருவர் இரண்டுவருடங்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

17 வயதுச்சிறுமியை நிவாரணம் தருவதாக அழைத்துச்சென்று தனிமையான இடமொன்றில் வன்புணர்வு செய்ததும் அலலாது, அதனைக் காணொளி எடுத்து கூட்டாக இன்னொரு பொலிஸ் உத்திஆயாகத்தரையும் இணைத்து இந்த இழிசெயலைத் தொடர்ந்துள்ளார். அது மட்டுமல்லாது, அந்தக் காணொளியை பிரதேச இளைஞர்கள், மற்றும் பாடசாலை மாணவர்களிடமும் காண்பித்துள்ளதுடன் அவர்களும் குறித்த சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு அழைத்துள்ளனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் தற்போது வல்வெட்டித்துறை, தெல்லிப்பழை ஆகிய இடங்களில் பணியாற்றி தற்போது முருங்கன் பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றுவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே அனைத்து தகவல்களும் வெளிவந்துள்ளன. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரை சிறுமியின் வாக்குமூலத்திலிருந்து அடையாளம் காணமுடியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal