14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, தகாத முறையில் ஈடுபடுத்தி , அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த சந்தேக நபரான உறவுக்கார பெண், அச்சிறுமியை பலருக்கும் பணத்துக்கு விற்றுள்ளார்.

மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத தொழிலுக்கு விற்றுள்ளார்.

இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் அப்பெண், சிறுமியை பல்வேறான வர்த்தகர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியை சீரழித்து உல்லாசத்தில் மிதந்த உறவுக்கார பெண்; பொறிவைத்து பிடித்த பொலிஸார்

12 வயதில் இருந்தே, கடந்த இரண்டு வருடங்களாக தகாத தொழிலில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபரான அப்பெண்ணுக்கு 32 வயதென தெரிவித்த பொலிஸார் இறுதியாக சிறுமியுடன் மீட்கப்பட்ட சந்தேநபருக்கு 38 வயது என்றும் தெரிவித்தனர்.

மேலும் கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal