
தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி – 2 கப்
- கடலைப் பருப்பு – 1/4 கப்
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு – 2 துண்டு
- ஏலம் – 2 எண்ணம்
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2 எண்ணம்
- பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
- தக்காளி – 2 எண்ணம்
- மல்லித் தழை – 3 மேசைக்கரண்டி
- புதினா தழை – சிறிது
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- எலுமிச்சம் பழம் – 1/2 பழம்
- எண்ணெய் – 4 தேக்கரண்டி
- வெண்ணெய் – 3 தேக்கரண்டி 16. தயிர் – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- அரிசி மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் மற்றும் வெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- பச்சை வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டிச் சேர்த்து மஞ்சள் தூள், பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா, மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.
- ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர், கால் கோப்பை பருப்பிற்கு அரை கப் தண்ணீர் என்று சேர்த்து, அத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விடவும்.
- சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறலாம்.