
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு தொலைபேசி மூலம்குறுந்தகவல் அனுப்பப்பட்டதனால், உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களைப் பெற்றுச்சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் (06.02.2023) உலக உணவுத்திட்ட அதிகாரிகள் குறுந்தகவல் ஊடாக அனுப்பிய தகவலுக்கமையவே இவ்வாறு நீண்ட வரிசையில் நின்று தமது பொருட்களை பெற்றுக்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உணவு பற்றாக்குறை மற்றும் போசாக்கின்மையினை கருத்தில் கொண்டு உலக உணவுத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தினையும் உள்வாங்கி, முதற்கட்டமாக, ஒரு குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி, 20 கிலோ கடலைபருப்பு, 5 லீற்றர் தேங்காய் எண்ணெய் வீதம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
அடுத்த கட்டமாக சமூர்த்திப் பயனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா பணமும் வங்கிகள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.