
குடும்பம் என்ற கூடு மகிழ்ச்சியாக , நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் அதில் வாழும் அனைவரும்..அதனை தன்னலம் பாராது நேசித்தல் வேண்டும். சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்…..இதோ சில….விடயங்கள்…
- குடும்பத்தில் ஒரு வேளையாவது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து உணவு உண்ண வேண்டும்.
- குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வர வேண்டும்.
- விடுமுறைகளில் வெளியூர் பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம் விட்டுப்பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டாடி வர வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் குடும்பத்துடன் எல்லோரும் சிறிது நேரமாவது இணைந்திருத்தல் வேண்டும்.
- ஒருவர் வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும். வாழ்த்துக்களைப் பரிமாற வேண்டும்.
- நிறைய புகைப்படங்கள் எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டும்.
- ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனித்தனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க வேண்டும். பேசச்சொல்லி, மன உணர்வுகளைக் கேட்டு அவர்கள் சுமையை இறக்கி வைக்கத் துணை புரிய வேண்டும்.
- விழா நேரங்களில் எங்கிருந்தாலும் வந்து கூடிக் கொண்டாட வேண்டும்.
- மனதளவில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் நினைத்துத் தினமும் வாழ்த்த வேண்டும்.
- உறவில் ‘தான்’ என்ற எண்ணம் வேண்டாம். போலிக் கௌரவம், மானம், ரோசம் குடும்பத்தில் வேண்டாம்.
- எவர் என்னைத் திட்டினாலும், கோபித்தாலும், என்னை அவமதித்தாலும், எனக்கு உதவி செய்ய மறுத்தாலும், நான் அன்பு செய்வேன். உங்கள் மேல் நான் கொண்டுள்ள அன்பே பேரானந்தம் என்று கூற வேண்டும்.
- தினசரி ஐந்து நிமிடமாவது அனைவரும் இணைந்து மன அமைதிக்கான தியானம் செய்ய வேண்டும்.