
பிரித்தானியாவில் Omicron மரபணு மாற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக பிளான் B கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது போதாதென, பிளான் C என்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பிரித்தானிய அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், புதன்கிழமை பிளான் B கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி, மாஸ்குகள் அணிவது கட்டாயம், வீடுகளிலிருந்து வேலை பார்க்க உத்தரவு முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால், பிளான் B திட்டங்களால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன.
அந்த கட்டுப்பாடுகளே, அதாவது பிளான் B கட்டுப்பாடுகளாலேயே ஆண்டின் வருவாய் வரும் காலகட்டமான கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து, வர்த்தக நிறுவனங்கள் கொந்தளித்துப் போயிருக்கும் நிலையில், Omicron வைரஸால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் அச்சுறுத்தல் இருப்பதாக நிரூபணமாகும் நிலையில், கூடுதலாக, பிளான் C திட்டத்தின் கீழ் புத்தாண்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் Omicron மரபணு மாற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக பிளான் B கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது போதாதென, பிளான் C என்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பிரித்தானிய அலுவலர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், புதன்கிழமை பிளான் B கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி, மாஸ்குகள் அணிவது கட்டாயம், வீடுகளிலிருந்து வேலை பார்க்க உத்தரவு முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால், பிளான் B திட்டங்களால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன.
அந்த கட்டுப்பாடுகளே, அதாவது பிளான் B கட்டுப்பாடுகளாலேயே ஆண்டின் வருவாய் வரும் காலகட்டமான கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து, வர்த்தக நிறுவனங்கள் கொந்தளித்துப் போயிருக்கும் நிலையில், Omicron வைரஸால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் அச்சுறுத்தல் இருப்பதாக நிரூபணமாகும் நிலையில், கூடுதலாக, பிளான் C திட்டத்தின் கீழ் புத்தாண்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.