
வறட்சியான காலநிலை காரணமாக, இலங்கையில் நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளதென மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு 20% நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கிட்டத்தட்ட 40% லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூலமாகவும் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றதென அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.