இலங்கையில் முதன் முதலாக ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று சனிக்கிழமை (22-01-2022) மாலை 6.30 மணியளவில் ஆரமாகி நடை பெற்றுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் சுமார் 150 ட்ரோன் வானில் பறக்கவிட்டு பல வண்ண வடிவங்களில் மின்குமிழ்கள் ஒளிரவிடப்பட்டது.
மேலும், இவ்வாறான ஒரு கண்காட்சி இலங்கையில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.01.2022)ஆம் திகதியும் மீண்டும் இடம் பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான நிகழ்வானது புது அனுபவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
