
வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களைப் பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குச் செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன் காரணமாக தமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.