இலங்கைக்குள் போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பிரவேசித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் வந்த அதே விமானத்தில் மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருவதற்காக வீசா அனுமதியைப் பெறுவதற்காக குறித்த இருவரும் நோர்வே கடவுச்சீட்டுகளை முன்வைத்த போது, ​​அவை போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal