
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்தில் குறித்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் 9ஆவது இலக்க நெடுங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.