சுவிட்சர்லாந்தில், இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் மாகாணத்தில், அக்டோபர் மாத துவக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென மாயமானார். பொலிசார் அவரைத் தேடி வந்த நிலையில், Hinteregg என்ற இடத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் அவரது உடலும் அவரது மோட்டார் சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்... வாக்கிங் சென்றவர் கண்ணில் பட்ட காட்சி

கடந்த சனிக்கிழமையன்று அவ்வழியே சென்ற ஒருவர், உயிரிழந்தவரின் உடலையும் அந்த மோட்டார் சைக்கிளையும், கண்டுபிடித்துள்ளார்.

உயிரிழந்த நபர் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கலாம் என்றும், பல வாரங்களாக அவரது உடல் காட்டில் கவனிக்காமல் விடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள். அவருக்கு 57 வயது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனாலும், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியாத நிலையில், சூரிச் பொலிசார் அது தொடர்பான விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

சம்பவ இடத்தில் நடந்த மீட்புப் பணி காரணமாக, அந்த பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை சுமார் மூன்று மணி நேரம் மூடப்பட்டு, வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal