ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. மொடல் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்.இ. சீரிசை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இதுவரை இரண்டு ஐபோன் எஸ்.இ. மொடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த சீரிசில் மூன்றாம் தலைமுறை மொடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் எஸ்.இ. 3 மொடலின் உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

உதிரிபாகங்களை வினியோகிக்கும் பல்வேறு நிறுவனங்களும் ஐபோன் எஸ்.இ.-க்கான பாகங்களை வினியோகம் செய்ய ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலில் 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி. எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஹோம் பட்டனில் கைரேகை சென்சார், ஆப்பிள் ஏ15 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 5ஜி கனெக்டிவிட்டி, 12 எம்.பி. பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. 

இந்த போன் இப்போதே ஐபோன் பிரியர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal